நேற்று காலை துபாய்
சிட்டி எப்.எம் 101.6 நடந்த ஆங்கில உரையாடலின் மொழிபெயர்ப்பு....
"ஹலோ சோனு""யெஸ்... யாரு?" "நான் பூஜா பேசுறேன். சிட்டி எப்.எம்ல இருந்து" "ஓ அப்படியா? என்னால நம்பவே முடியல" "உண்மையாதான் சோனு" "சொல்லுங்க பூஜா என்ன விசயம்?" "நீங்க கிருத்திகாவுக்கு(மற்றுமொரு RJ) மெயில்ல என்ன அனுப்பினீங்க?" "ஏன் என்னாச்சு?" "நேத்து மட்டும் கிட்டதட்ட 52 மெயில் அனுப்பியிருக்கீங்க...." "ஆமா பூஜா...அது வந்து...." "அதுவும் என்னமா உருகி உருகி ஏதேதொ எழுதி அனுப்பியிருக்கீங்க" "ஏன் அவுங்க கோவிச்சுக்கிட்டாங்களா?" "சோனு...சான்ஸே இல்லை. எல்லாமே சூப்பரா இருந்தது உங்க மெயில் பார்த்ததிலிருந்து அவ எப்பவும் உங்களைப் பத்தியே தான் பேசுறா" "அப்படியா? என்ன பேசுறாங்க?" "என்ன பேசுறாங்களா...என்ன தான் சொக்குபடி போட்டீங்களோ எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கா" "ஈஸ் இட்" "நான் அவளோட கஸின் தான் அதுனால உங்ககிட்ட நேரடியா கேட்கிறேன். அவளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க" "நான் எப்பவும் அவுங்களப் பத்தி தான் நினைச்சுட்டு இருக்கேன். அதுனால தானே அப்படி மெயில் அனுப்பினேன் " "அய்யோ உங்கள மாதிரி ஒரு ஆள் கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கனும். நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா பொருத்தமா இருப்பீங்க...எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" "ஹலோ நீங்க என்ன சொல்ல வரீங்க (சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் வார்த்தைகள் வருகிறது)" "இன்னுமா உங்களுக்கு புரியல..." "இல்ல அவுங்க என்ன நினைக்குறாங்கன்னு தெரியாம..." "அட என்னங்க நீங்க சதா உங்களப்பத்தியே யோசிச்சிட்டு இருக்காங்கன்றேன். திரும்பவும் கேட்கிறீங்க...அவுங்க இந்த மாதிரி சிரிச்சு சந்தோஷமா பேசி ரொம்ப நாள் ஆச்சு" "அப்படியா(சந்தோஷத்துடன்)""ஆமாங்க அவளோட முத புருஷன் கொடுத்த டார்ச்சர்ல ரொம்ப நாள் மூடில இருந்தா இப்ப தான்.. " "எக்ஸ்கியூஸ்மீ..ஒரு நிமிஷம்..அவுங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" "ஆமா சோனு. என்ன சோனு அவளோட பெரிய ஃபேனா இருந்துகிட்டு அவளப் பத்தி எதுவும் விசாரிக்கலையா என்ன" "இருங்க எனக்கு ஒன்னும் புரியல(நடுக்கத்துடன்)" "ஹேய் சோனு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை... உனக்கு சர்பரைஸ்..அவளோட ஒரு சின்ன அழகான தேவதை "குஷி"யைப் பார்த்தா நீ உலகத்தையே மறந்திடுவ" "என்னது குழந்தையா? அவுங்களுக்கு என்ன வயசிருக்கும்""இருபத்தெட்டு...உனக்கென்ன வயசு?""இருபத்தஞ்சு தான் ஆகுது""இப்பல்லாம் மூணு வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்லை..நீ, கிருத்திகா, குஷி மூணு பேரையும் ஒரே பேமிலியா நினைச்சுப் பார்க்கவே எனக்கு சந்தோஷமா இருக்கு. என்ன சோனு சத்ததையே காணோம்?" "இல்ல என் அம்மா அப்பாகிட்ட கேட்டு தான் முடிவெடுக்கனும்...(இழுக்கிறான்)" "ஏன் சோனு...." என்று அவள் முடிக்கும் போது "ஹேப்பி பர்த்டே டூ யூ" என்ற பாட்டு ஒலிக்க அங்கு இரண்டு பெண்கள் சிரிக்க கேட்டுகொண்டிருந்தவன் கொஞ்சம் அதிர்ச்சியடைந்து பின்பு அவனை கலாய்கிறார்கள் என்று புரிகிறான். "சோனு நீங்க சிட்டி எப்.எம் 101.6 லைவ்வா பேசிட்டிருக்கீங்க. பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று கிருத்திகா வருகிறார். சோனு நீங்க பயப்படவேண்டாம் என்னைய கல்யாணமும் செய்திக்க வேண்டாம் என்று சிரிப்பை அடக்க முடியாமல் கூறிகிறாள். அவன் அசடு வழிந்து போனை வைக்கிறான்.
பின்பு 5 நிமிடம் கழிந்து "நிறைய மெசேஜ் வருகிறது. "கிருத்திகா உனக்கு 10 குழந்தை இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றெல்லாம் வருகிறது." என்று சிரித்துகொண்டே கூறிகிறாள். மெசேஜ் அனுப்பியவர்களுக்கு நன்றி வேறு.
இந்த உரையாடல் அப்போது கேட்க சுவாரஸியமாக இருந்தாலும் ஒரு ஆளை கலாய்க்க இந்த மாதிரி ஒரு விஷயத்தை கையாண்ட அந்த பெண்ணின் மேல் வெறுப்பு தான் வந்தது.
இது மட்டும் பெங்களூரில் நடந்திருந்தா நம்ம இராம சேனா அமைப்பு உண்மையாலும் கண்னாலம் செஞ்சு வச்சிருப்பாங்க.......அம்மணி சூதானமப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வெள்ளிக்கிழமை துபாயில நண்பனைப் பார்த்துட்டு டாக்ஸிக்காக காத்திருந்தேன்.
மதியம்னால ரோடு கொஞ்சம் ட் ராபிக் இல்லாம இருந்தது. ஒரு டாக்ஸியை கையைப் போட்டு நிறுத்தினேன்.
அவன் கண்ணாடிய இறக்கி பார்த்தபோது இரண்டு பேருக்கும் ஒரே அதிர்ச்சி...
நான் "நீயா....ன்னு" கேட்க
அவன் "தும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"ன்னு இழுக்க...அப்படியே கொசுவத்தி சுருள் இரண்டு பேருக்கும் சுத்திச்சு....
சரியா ஒரு மாசம் முன்ன பொங்கலுக்கு மொதோ நாள். டெய்லி மெஸ்ல சாப்பிட்டு காஞ்சு போய் கிடக்கிற நாம, இந்த மாதிரி பொங்கல், தீபாவளின்னு ஏதாவது பண்டிகை வரும் போது பண்டிகையை கொண்டாடுற ஒரு நண்பருக்கு ஒரு நாள் முன்னவே போன் போட்டு விஷ் பண்றது வழக்கம்.
அவரும் யதார்த்தமா நாளைக்கு வாங்க தலைவா ஸ்பெஷல் சாப்பாடு இருக்குதுன்னு கூப்பிடுவார். பின்ன போன் பண்ணியதே அதுக்கு தானே...விடுவோமோ கண்டிப்பா உங்களுக்காக வரேன்ன்னு சொல்றது வழக்கம்.
இந்த வருஷமும் ஒரு நாள் முன்ன போன் செய்தப்ப அவரு "அண்ணே ப்ரீயா இருந்தா இப்ப ரூம் பக்கம் வாங்கண்ணேன்னு" சொன்னாரு. நானும் போனேன்.
நாளைக்கு பொங்கலுக்கு நிறைய சாமான் வாங்கனும் பர் துபாய் வரைக்கும் போய்ட்டு வரலாம் வாங்கன்னு கூப்பிட்டார். சரின்னு வேற வழியில்லாம போனேன்.
போய் நிறைய சாமானெல்லாம் வாங்கின பிறகு ஒரு இடத்தில அவ்ர் நின்னுட்டாரு. அவர் கண்ணு சும்மா பள பளன்னு மின்னுச்சு. என்னன்னு பார்த்தா "கரும்பு".
என்ன தலைவா இங்க நின்னுட்டீங்கன்னு கேட்டேன். கரும்பு வாங்கியே ஆகனும்னு அடம் பிடிச்சாரு. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல....
சரின்னு வாங்கினோம். பஸ்ஸிக்காக காத்திருந்து பஸ்ஸில் ஏறப்போன போது டிரைவர் கரும்போட உள்ள்வே விடல.
டாக்ஸிகாரனும் வரமாட்டேன்னு சொல்லிட்டான். ரொம்ப நேரம் கழிச்சு ஒரு டாக்ஸிகாரன் வந்தான். உள்ள உட்காரசொன்னவன் கரும்பு டிரைவர் சீட்டு வரைக்கும் நீட்டிகிட்டு இருக்குற பார்த்து, உள்ள தள்றேன்னு டக்னு இரண்டு கரும்பையும் இரண்டா உடைச்சுட்டான்.
அவ்வளவுதான் நம்ம நண்பர் பத்ரகாளியா மாறி கத்த அவன் கத்த, ஹிந்தில இத்தனை கெட்ட வார்த்தை இருக்கான்னு அப்பதான் தெரிஞ்சுது.

திரும்பவும் கொசுவத்தி சுருளுக்கு போவோம்.....
ரெண்டு பேரும் திரும்ப ஜர்க்லருந்து வெளிய வந்தோம். எனக்கு அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து சிரிச்சேன். அவனும் சிரிச்சான்.
முத தடவையா ஒரு பாகிஸ்தானி இப்படி என்கிட்ட சிரிச்சு இப்ப தான் பார்க்கிறேன். அவனுக்கும் அந்த சம்பவத்தை நினைச்சு இப்ப சிரிப்பு வந்த அந்த நகைச்சுவை உணர்வு ஆச்சர்யமே....
டிஸ்கி: இரண்டு சுருள்லையும் வித்தியாசம் இருக்கு. கண்டு பிடிங்க பார்க்கலாம்--------------------------------------------------------------------------------------------------------------------------------
போன வாரம் நண்பன் ஒருத்தன் அவனோட நண்பிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான். அன்னையர் தினம், காதலர் தினம் மாதிரி இன்னைக்கு "உலக கற்பழிப்பு தினம்"(World rape day). அதுனால இன்னைக்கு வெளிய எங்கையும் போகாதே என்று.
அதுக்கு அவகிட்ட இருந்து reply வந்தது....
FYI நான் இன்னைக்கு பெசன்ட் நகர் போறேன்.